கலாபவன் மணி மரணத்திற்கும் திலீப் தொடர்பா? அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Thursday,July 13 2017]

பிரபல நடிகை ஒருவர் பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவத்திற்கு நடிகர் திலீப் தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து தற்போது திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மர்மமான முறையில் மரணம் அடைந்த நடிகர் கலாபவன் மணி மரணத்திற்கும் திலீப் தான் காரணம் என்றும் அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் பிரபல மலையாள இயக்குனர் பைஜூ என்பவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து கொச்சி மாவட்டத்தில் கொட்டாரகரையில் அமைந்துள்ள சி.பி.ஐ. அலுவலத்தில் இன்று புகார் அளிக்க உள்ளதாகவும் கூறப்படுவதால் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கலாபவன் மணி மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கலாபவன் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன் சி.பி.ஐ. அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நாசர் மகனை மெர்சலாக்கிய 'மெர்சல்' திரைப்படம்

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் செய்திகள் தினந்தோறும் சமூக இணையதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

போதை பொருள் விற்பனையில் பிரபல நடிகை: விசாரணைக்கு வருமாறு காவல்துறை நோட்டீஸ்

தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர்கள் சிலர் போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் வருத்தத்துடன் கூறிய செய்தியை நேற்று பார்த்தோம்

ஆன்லைன் ரம்மி விளையாடினால் கைது! அரசின் அதிரடி அறிவிப்பு

கடந்த சில வருடங்களாகவே ஆன்லைனில் ரம்மி விளையாடும் வழக்கம் பொதுமக்களுக்கு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விளம்பரத்தில் பிரபல நடிகர் ஒருவரே நடித்துள்ளதால் இந்த பழக்கம் மிக அதிகமானவர்களிடம் பரவியுள்ளது...

நயன்தாராவுடன் மனவருத்தம் ஏற்பட்டது உண்மைதான்: மோகன் ராஜா

பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

அரசியலுக்கு வந்தால் ரஜினிக்கும் என் எதிர்ப்பு இருக்கும்! கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, நிருபர் ஒருவர் உங்கள் நண்பர் ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வந்தால் அவருக்கு உங்களுடைய ஆதரவு இருக்குமா? என்று கேட்டார்...